இலங்கையில் இன்றுள்ள ஐந்து நட்சத்திர ஜனநாயகத்தில் எந்தப் பொய்யையும் சமூகமயப்படுத்த முடியும் - வஜிர!
#SriLanka
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
#srilankan politics
Thamilini
1 year ago
இலங்கையில் இன்றுள்ள ஐந்து நட்சத்திர ஜனநாயகத்தின் காரணமாக எந்தப் பொய்யையும் சமூகமயப்படுத்த முடியும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
அத்தகைய சுதந்திரம் இல்லாததால்தான் சீனா போன்ற நாடுகள் வளர்ச்சியடைந்துள்ளன என்றும் அவர் கூறினார்.
காலி வண்ணத்துப்பூச்சி விளையாட்டரங்கில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்படும் பொருளாதார வேலைத்திட்டத்தை விமர்சிப்பதற்கு பல்வேறு குழுக்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் அவதூறு பரப்பும் சமூக ஊடகங்களுக்கு இடமில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.