கடைகளில் மிளகாய்த்தூள் வாங்குபவர்களுக்கு எச்சரிக்கை!
#SriLanka
#Lanka4
#lanka4Media
#lanka4_news
#lanka4.com
PriyaRam
1 year ago
மிளகாய்த்தூளுடன், பாண்தூள் மற்றும் அரிசித்தூளை கலந்து விற்பனை செய்யும் குழு தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புறக்கோட்டையில் காணப்படும் சில பலசரக்கு வர்த்தக நிலையங்களில் இவ்வாறான மோசடி இடம்பெற்று வருவதாக நுகர்வோர் குற்றம் சுமத்துகின்றனர்.

குறித்த மோசடி நடவடிக்கைகளுக்காக புறக்கோட்டையில் உள்ள மொத்த விற்பனை நிலையங்களில் இருந்து ஒதுக்கப்பட்ட பாண்தூள் மற்றும் அரிசித்தூள் என்பன பயன்படுத்தப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.
இவ் விடயம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.