கணேசமூர்த்தி ஆசிரியருக்கு மணிவிழா வாழ்த்துக்கள்
கிளிநொச்சி மாவட்டத்தில் அரச சேவையில் 33 ஆண்டுகள் ஆசிரியராக, அதிபராக பணியாற்றி இன்று மணிவிழா காணும் கணேசமூர்த்தி சேர் கணித, விஞ்ஞான பாட ஆசிரியராக பணியாற்றியுமுள்ளார்.
இன்று வரை கற்பித்தல் சேவையினை தொடர்ந்தும் வரும் அவர் வட்டக்கச்சி அறிவொளி கலைக் கல்லூரி நிலையத்தில் கணித பாட ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார் திரு.க.இராஜேந்திரம் சேர் ஐயனார்புர பாடசாலை அதிபராக கடமை புரிந்த காலத்தில் அவருடன் இணைந்து அப் பாடசாலையை வடிவமைப்பதில் ஆரம்ப கர்த்தாவாக முழுமுச்சாக நின்று அரும்பாடுபட்டவர்.

இராஜேந்திரம் சேரின் பேரன்புக்குரியவர் என்றே கூறவேண்டும் திரு Rajendram Kanapathy சேர் அடிக்கடி என்னிடம் விசாரித்து கொள்ளும் பேரன்பாளன் கடந்த 11 ஆண்டுகளாக இந்து ஆரம்ப வித்தியாலயத்தின் அதிபராக நிறைவான பணியாற்றி பாடசாலையை அடுத்த படி நிலைக்கு வளர்த்துச் சென்று கடந்த வெள்ளிக்கிழமை 22.12.2023 அன்று பாடசாலை பணியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
என் அன்புக்குரிய ஆசிரியர், கூடவே நண்பன் Keerthan Ganeashamoorthy அவர்களின் தந்தையும், இளைஞர்கள் சிறுவர்களை அன்பான பண்பான வார்த்தைகளால் இலகுவில் கவர்ந்து கொள்ளக்கூடியவர். பாலன் பிறந்த நாளில் எங்கள் பாலன் கணேசமுர்த்தி சேரிற்கு மணிவிழா வாழ்த்துகள்.
ஓய்வு காலம் சிறப்பாக அமைய வாழ்த்துகள்.