வர்த்தகர் ஒருவரின் துப்பாக்கி திருடப்பட்டுள்ளதாக முறைப்பாடு!
#SriLanka
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
பிரபல வர்த்தக நிறுவனம் ஒன்றின் தலைவர் ஒருவரின் துப்பாக்கி திருடப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலுக்கு அமைய வத்தளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த வர்த்தகர் தனது உரிமம் பெற்ற தனிப்பட்ட துப்பாக்கி திருடப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
தான் தூங்கும் போது தனது படுக்கையில் வைத்திருந்த துப்பாக்கியை யாரோ திருடிச் சென்றிருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.
சந்தேக நபர் துப்பாக்கி மற்றும் 12 ரக துப்பாக்கிகள் அடங்கிய மகசீனையும் திருடியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் வத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்