எல்ல பாலத்திற்கு அருகில் ரயில் மோதி இளம் பெண் உயிரிழப்பு!
#SriLanka
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
எல்ல மற்றும் தெமோதர புகையிரத நிலையங்களுக்கு இடையில் உள்ள 09 வளைவு பாலத்திற்கு அருகில் ரயிலுடன் மோதி யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கிடலெல்ல பிரதேசத்தில் வசிக்கும் 21 வயதுடைய திருமணமாகாத யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்த இரவு அஞ்சல் புகையிரதத்தில் மோதுண்டு குறித்த யுவதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.