அரசாங்க வரி இழப்பு - அதிகாரிகள் மீது உடனடி சட்ட நடவடிக்கை!
#SriLanka
#government
#Tax
PriyaRam
1 year ago
அரசாங்கத்துக்கு வரி இழப்பை ஏற்படுத்தியமைக்காக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் 5 அதிகாரிகள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கையூட்டல் விசாரணை ஆணைக்குழுவினால் கொழும்பு மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முச்சக்கர வண்டி பதிவு தொடர்பான தரவுகளை நீக்கிவிட்டு சொகுசு மகிழுத்து ஒன்றின் தரவுகளை உள்ளிட்டு, போலியான ஆவணங்களை பதிவு செய்து அரசாங்கத்துக்கு கிடைக்க வேண்டிய வரியை இழக்க செய்துள்ளதாக கையூட்டல் விசாரணை ஆணைக்குழு குறித்த அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளது.