பாதுக்க பகுதியில் துப்பாக்கிச்சூடு : இருவர் உயிரிழப்பு!
#SriLanka
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
பாதுக்க, துன்னான பகுதியில் இன்று (25.12) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர் பாதாள உலகக் குழு உறுப்பினர் 'மன்ன ரொஷான்' என அழைக்கப்படும் டொன் இந்திக்க மற்றும் அவரது சீடன் என தெரியவந்துள்ளது.
பாதாள உலகக் குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் குறித்த இருவரும் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.