உலகில் அமைதியும் சுபீட்சமும் நிலவ பிரார்த்திப்போம்: லங்கா4 வாசகர்களுக்கு நத்தார் தின வாழ்த்துக்கள்

#SriLanka #Festival
Mayoorikka
1 year ago
உலகில் அமைதியும் சுபீட்சமும் நிலவ பிரார்த்திப்போம்: லங்கா4 வாசகர்களுக்கு நத்தார் தின வாழ்த்துக்கள்

உலகெங்கும் வாழும் கிறிஸ்தவ மக்களால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி பெரிதாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் கிறிஸ்துமஸ் பண்டிகை முக்கியமானது.

 கிறிஸ்தவ மக்கள் இயேசு பிரானின் பிறப்பை நத்தார் பண்டிகையாக இன்று திங்கட்கிழமை (25) கொண்டாடுகின்றனர். இறைவன் எளிமையானவன். ஏழை, எளியவர்களுக்கு நெருக்கமானவன். 

எளிய சூழல்களில் சஞ்சரிப்பவன். ஏழை - பணக்காரர் பாமரர் படித்தவர் உயர்ந்த சாதி தாழ்ந்த சாதி நல்லவர் கெட்டவர் கறுப்பர் வெள்ளையர் என எந்த பாகுபாடும் பார்க்காதவன். 

 எல்லோருக்கும் பொதுவான ஔிமயமானவன். கருணையின் ரூபமாய் வாழ்கிறவன். இதையே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பிறப்பு இந்த உலகுக்கு உணர்த்துகிறது. இறைவன் தன் மகனான பாலகன் இயேசுவை ஒரு மாட்டுத் தொழுவத்தில் பிறக்கச் செய்தார். 

images/content-image/2023/1703470727.jpg

கந்தல் துணிகளால் சுற்றிக்கிடக்கவும் செய்தார். ஏனென்றால், இறைவன் தான் விரும்புவது எளிமையையே. அந்த எளிமையே இயேசுவின் வாழ்நாள் முழுவதும் அவரோடு இருந்தது. 

அதுமட்டுமன்றி இயேசு அன்பானவர். அன்பையே அவர் தன்னைப் பின் தொடர்ந்தவர்களுக்கு போதனையாகச் செய்தவர். 

 பிறருக்காக பல தியாகங்களைச் செய்த அற்புதமான இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாளானது அன்பையும் தியாகத்தையும் போதிக்கும் அற்புத நாளாகும். இவர் காட்டிய வழியில் நாமும் பயணித்து அனைவருக்கும் அன்பு செலுத்தி மகிழ்வோம்.

 லங்கா4 இணையத்தள வாசகர்கள் அனைவருக்கும் இனிய நத்தார் தின வாழ்த்துக்கள்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!