முல்லேரியா பகுதியில் உள்ள வீடொன்றில் தீப்பரவல்!
#SriLanka
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
முல்லேரியா புதிய நகரில் களனிமுல்ல பகுதியில் உள்ள வீடொன்றில் திடீரென தீ பரவி வீடு முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீவிபத்தின்போது வீட்டிற்குள் குழந்தை ஒன்று மாத்திரம் உறக்கத்தில் இருந்ததாகவும், குறித்த குழந்தையை அக்கம்பக்கத்தினர் காப்பாற்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எனினும் தீவிபத்துக்கான காரணம் கண்டறியப்படவில்லை.
சம்பவம் தொடர்பில் முல்லேரியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.