பண்டிகைக் காலத்தை முன்னிட்டு விசேட பஸ் மற்றும் ரயில் சேவைகள்
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, இன்று வெள்ளிக்கிழமை (22) முதல் விசேட பொது போக்குவரத்து சேவைகள் நடைமுறைப்படுத்தப்படும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி, விடுமுறையில் சொந்த ஊருக்குத் திரும்பும் பொதுமக்களுக்காக அனைத்து நீண்ட தூரப் பயணங்களுக்கும் கூடுதலாக 100 பஸ்கள் இயக்கப்படும்.
இதனிடையே, பண்டிகை கால சிறப்பு ரயில் சேவை நாளை சனிக்கிழமை (23) ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், கொழும்பு கோட்டைக்கும் பதுளைக்கும் இடையில் பயணிக்கும் ரயில்களுக்கான விசேட நேர அட்டவணை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன், டிசம்பர் 31 ஆம் திகதி வரை அமுலிலிருக்கும் எனவும் தெரிவித்துள்ளார். (அட்டவணை கீழே உள்ளது)
டிசம்பர் 22
- கொழும்பு கோட்டை - பதுளை வரை - இரவு 7:30 மணிக்கு புறப்படும்.
- பதுளை - கொழும்பு கோட்டை - மாலை 5:20 மணிக்கு புறப்படும்.
டிசம்பர் 23
- கொழும்பு கோட்டை - பதுளை - காலை 7:30 மணிக்கு புறப்படும்.
- கொழும்பு கோட்டை -பதுளை வரை - இரவு 7:30 மணிக்கு புறப்படும்.
- கண்டி - பதுளை - இரவு 7:00 மணிக்கு புறப்படும்.
- பதுளை - கொழும்பு கோட்டை - மாலை 5:20 மணிக்கு புறப்படும்.
டிசம்பர் 24
- பதுளை - கொழும்பு கோட்டை - காலை 7:45 மணிக்கு புறப்படும்.
- பதுளை - கண்டி - காலை 10:45 மணிக்கு புறப்படும்
டிசம்பர் 25
- கொழும்பு கோட்டை பதுளை - காலை 7:30 மணிக்கு புறப்படும்.
- கண்டி - பதுளை - காலை 7:00 மணிக்கு புறப்படும்.
- கொழும்பு கோட்டை - பதுளை வரை - இரவு 7:30 மணிக்கு புறப்படும்.
- பதுளை - கொழும்பு கோட்டை - மாலை 5:20 மணிக்கு புறப்படும்
டிசம்பர் 26
- கொழும்பு கோட்டை - பதுளை - இரவு 7:30 மணிக்கு புறப்படும்.
- பதுளை - கொழும்பு கோட்டை - காலை 7:45 மணிக்கு புறப்படும்.
- பதுளை - கண்டி - காலை 10:45 மணிக்கு புறப்படும்.
- பதுளை - கொழும்பு - மாலை 5:20 மணிக்கு புறப்படும்.
டிசம்பர் 27
- கொழும்பு கோட்டை - பதுளை - காலை 7:30 மணிக்கு புறப்படும்.
டிசம்பர் 28
- பதுளை - கொழும்பு கோட்டை - காலை 7:45 மணிக்கு புறப்படும்.
டிசம்பர் 29
- கொழும்பு கோட்டை - பதுளை - காலை 7:30 மணிக்கு புறப்படும்.
டிசம்பர் 31
- பதுளை - கொழும்பு கோட்டை - காலை 7:45 மணிக்கு புறப்படும்