முதலாவது தமிழர் என்ற வரலாற்று பெருமையைப் பெற்றுள்ள நீதிபதி இளஞ்செழியன்!

#SriLanka #Colombo #Judge #HighCourt
PriyaRam
1 year ago
முதலாவது தமிழர் என்ற வரலாற்று பெருமையைப் பெற்றுள்ள நீதிபதி இளஞ்செழியன்!

இலங்கையில் 2024 ஆம் ஆண்டுக்கான மேல் நீதிமன்ற நீதிபதிகள் சங்க தலைவராக நீதிபதி இளஞ்செழியன் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

இலங்கை மேல் நீதிமன்ற நீதிபதிகள் சங்க வருடாந்த பொதுக்கூட்டம் நேற்றுமுன்தினம் கொழும்பில் இடம்பெற்றது. 

அந்த கூட்டத்தின்போதே நீதிபதி இளஞ்செழியன் சங்க தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

images/content-image/2023/12/1703049066.jpg

இவர் கடந்த 2022ஆம் ஆண்டு மேல் நீதிமன்ற நீதிபதிகள் சங்க தலைவராக தெரிவு செய்யப்பட்டிருந்தார். 

தற்சமயம் இரண்டாவது தடவையாக 2024 ஆம் ஆண்டுக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதேவேளை உபதலைவராக எஸ்.எச்.எம்.என்.லக்மாலி, செயலாளராக எச்.ஏ.டி.என். ஹேவாவாசம், பொருளாளராக கே.ஏ.டி.கே.ஜெயதிலக்க மற்றும் உப செயலாளராக டபிள்யூ.டி.விமலசிறி ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

மேல் நீதிமன்ற நீதிபதிகள் சங்க தலைவராகபதவி வகிக்கும் முதலாவது தமிழர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!