100 இந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் தற்காலிக இடைநீக்கம்

#India #Parliament #Protest #world_news #suspend #Member
Prasu
2 years ago
100 இந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் தற்காலிக இடைநீக்கம்

இந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் சுமார் 100 பேர் பாராளுமன்ற அமர்வில் பங்குபற்றுவதில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர்.

கடந்த வாரம் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற பாதுகாப்பு அத்துமீறல் சம்பவம் குறித்து அரசாங்கம் அறிக்கை வெளியிட வேண்டும் என்று தெரிவித்து போராட்டம் நடத்தினர்.

இதனையடுத்து பல வருடங்களுக்கு பின்னர் ஒரே அமர்வில் அதிகமானோர் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர். பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருசிலர் டிசம்பர் 21ஆம் திகதி வரையில் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர்.

இந்திய பாராளுமன்றத்தின் மக்களவையில் கடந்த 13 ஆம் திகதியன்று இனந்தெரியாத நபர்கள் வண்ண புகை குண்டுகளை வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாராளுமன்ற பாதுகாப்பு குறைபாடு குறித்து அமளியில் பலர் ஈடுபட்டனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4