கைதிகளை ஏற்றிச் செல்லும் பேருந்துகள் தொடர்பில் புதிய நடவடிக்கை!
#SriLanka
#Prison
#Camera
PriyaRam
2 years ago
நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக கைதிகள் அழைத்துவரப்படும் பேருந்துகளுக்கு CCTV கமராக்களை பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, குறித்த கமராக்களின் ஊடாக பதிவாகும் காணொளிகளை, நாளாந்தம் ஆராயவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் கைதிகளின் பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.