மாணவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் அனைத்து செயற்பாடுகளும் நிறுத்தப்படும் - தேசப்பந்து தென்னகோன்!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news #School Student
Thamilini
2 years ago
மாணவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் அனைத்து செயற்பாடுகளும் நிறுத்தப்படும் - தேசப்பந்து தென்னகோன்!

எதிர்வரும் பாடசாலை விடுமுறைகள் முடிவடைவதற்குள் பாடசாலைகளைச் சுற்றியுள்ள சிறுவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களை விற்பனை செய்யும் அனைத்து இடங்களும் அகற்றப்படும் என பதில் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.  

கொழும்பு வேலுவன வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், ”ஒவ்வொரு பள்ளியிலிருந்தும் 500 மீட்டருக்குள் குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களை விற்கும் அனைத்து இடங்களும் மீண்டும் பள்ளிகள் தொடங்கும் போது இருக்க அனுமதிக்கப்படாது. 

இது தொடர்பாக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு தீங்கு விளைவிக்கும் அனைத்தும் அகற்றப்படும். 

எதிர்வரும் பாடசாலை விடுமுறை நாட்களில் அவ்வாறான இடங்களை சோதனை செய்து அகற்றுமாறு பொலிஸ் மா அதிபர்களுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!