கிரிபத்கொட பகுதியில் துப்பாக்கிச்சூடு!
#SriLanka
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
கிரிபத்கொட, காலா சந்தி பகுதியில் உள்ள இரவு விடுதி ஒன்றில் இன்று (18.12) அதிகாலை 2.30 மணியளவில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
சுமார் 6 முறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
எனினும் இந்த துப்பாக்கிச்சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் கிரிபத்கொட பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்