புதுமுறிப்பு குளத்தில் ஏற்பட்டுள்ள கசிவு : பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
புதுமுறிப்பு குளத்தில் ஏற்பட்டுள்ள கசிவு : பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்!

புதுமுறிப்பு குளத்தில் சிறிய கசிவு ஏற்பட்டுள்ள நிலையில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு இடர் மேலாண்மை பிரிவு தயாராகி வருகிறது. தொடர் மழை காரணமாக குளத்தில் ஏற்பட்டுள்ள கசிவு நீர்பாசன பொறியாளர்கள் மூலம் கண்காணித்து ஆய்வு செய்யப்பட்டது. 

ஆபத்தான சூழ்நிலை எதுவும் ஏற்படாததை அவதானித்த பொறியாளர்கள், பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவிற்கு அறிவுறுத்தியுள்ளனர். 

இதனையடுத்து இன்று (16.12)காலை இராணுவத்தினரின் உதவியுடன் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  

வெள்ள அனர்த்தம் தொடர்பில் மக்கள் அச்சமடைவதுடன் அவதானமாக இருக்க வேண்டிய அளவு அபாயகரமான நிலைமை ஏற்படவில்லை என மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!