மும்பை அணிக்கு புதிய தலைவர் நியமனம்

#Lanka4 #IPL #Cricket #sports #Mumbai #Appoint #2024
Prasu
4 months ago
மும்பை அணிக்கு புதிய தலைவர் நியமனம்

அடுத்த ஆண்டு இடம்பெறவுள்ள ஐ.பி.எல் தொடரில் மும்பை அணியின் தலைவராக ஹர்த்திக் பாண்டியா செயற்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளாக மும்பை அணியின் தலைவராக ரோகித் ஷர்மா செயற்பட்டு வந்த நிலையில், அடுத்த ஆண்டு முதல் ஹர்த்திக் பாண்டியா தலைவராக செயற்படுவார் என அணியின் நிர்வாகம் அறிவித்துள்ளது.

பல ஆண்டுகளாக மும்பை அணிக்காக விளையாடிய ஹர்த்திக் பாண்டியா, 2022ஆம் ஆண்டு முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட குஜராத் டைட்டனஸ் அணிக்கு தலைமையேற்று விளையாடினார்.

ஹரத்திக் பாண்டியா தலைமையில் விளையாடிய குஜராத் அணி முதல் அறிமுகத்திலேயே கிண்ணத்தை தனதாக்கியது. இந்த ஆண்டு நடந்து முடிந்த ஐ.பி.எல் தொடரிலும் இறுதிப் போட்டிக்கு தெரிவாகியிருந்தது.

தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் குஜராத் அணிக்காக விளையாடிய ஹர்த்திக் பாண்டியா அண்மையில் மீண்டும் மும்பை அணிக்கே திரும்பினார்.

 இந்நிலையில், எதிர்காலத்தில் அணியை கட்டியெழுப்பும் நோக்கில் ஹர்த்திக் பாண்டியாவை தலைவராக நியமித்துள்ளதாக மும்பை அணியின் நிர்வாகம் அறிவித்துள்ளது.