இலங்கையில் மீண்டும் ஒரு புயலை ஏற்படுத்தும் பண்டோரா ஆவணம் - பிரிடிஸ் தீவுகளில் நிறுவனம்; சிக்கிய முக்கிய அமைச்சர்!

#SriLanka #UnitedKingdom
PriyaRam
2 years ago
இலங்கையில் மீண்டும் ஒரு புயலை ஏற்படுத்தும் பண்டோரா ஆவணம் - பிரிடிஸ் தீவுகளில் நிறுவனம்; சிக்கிய முக்கிய அமைச்சர்!

கடல் கடந்து பல சொத்துக்களை வைத்திருக்கும் நபர்களின் பட்டியலை பண்டோரா ஆவணம் வெளியிட்டுள்ள நிலையில் அதில் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் லண்டனில் சொத்துக்களை வைத்திருக்கும் இரண்டு பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகளின் நிறுவனங்களுக்குச் சொந்தமானவர் என்பதை புலனாய்வுப் பத்திரிகையாளர்களின் சர்வதேசக் கூட்டமைப்பான பண்டோரா பேப்பர்ஸ் தரவு காட்டியுள்ளது.

images/content-image/2023/12/1702638805.jpg

200 க்கும் மேற்பட்ட நாடுகளில் அரசியல்வாதிகள், பிரபலங்கள், வணிகர்கள் மற்றும் குற்றவாளிகளின் நிதி ஒப்பந்தங்கள் மற்றும் மறைக்கப்பட்ட சொத்துக்களை அம்பலப்படுத்தும் வகையில் பண்டோரா ஆவணம் பல விடயங்களை வெளியிட்டு வருகின்றது.

அதன்படி பொது பாதுகாப்பு அமைச்சரின் ப்ரொம்ப்டன் ப்ரொப்பர்டீஸ் லிமிடெட், லண்டனில் உள்ள ஒரு வசதியான பகுதியில் 2006 இல் சுமார் 960,000 டொலருக்கு வாங்கப்பட்டதாகவும் இரண்டாவது பான்ஹாம் வென்ச்சர்ஸ் லிமிடெட், 2008 ஆம் ஆண்டு வாங்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கசிந்த ஆவணங்களில் உள்ள ஒரு அறிவிப்பின்படி, பி.வி.ஐ நிறுவனங்களுக்கு நிதியளிக்கப் பயன்படுத்தப்பட்ட நிதி, ஒரு தொழிலதிபராக டிரன் அலஸ்ஸிடம் இருந்து வந்ததை காட்டுகின்றது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!