ஜப்பானில் தங்கள் பதவியை கூட்டாக இராஜினாமா செய்த அமைச்சர்கள்!

#SriLanka #world_news #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
ஜப்பானில் தங்கள் பதவியை கூட்டாக இராஜினாமா செய்த அமைச்சர்கள்!

ஜப்பானிய அமைச்சரவை அமைச்சர்கள் 4 பேர் திடீரென தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

நிதி சேகரிப்பின் போது மேற்கொள்ளப்பட்ட மோசடி தொடர்பில் அவர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டதை அடுத்து அவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இவர்கள் ஜப்பானிய ஆளும் கட்சியின் பலமான முகாமைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

2022 வரை 5 ஆண்டுகளுக்கு சுமார் 500 மில்லியன் யென் மற்ற கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்டது. இதுகுறித்து, அதிகாரிகள் விசாரணையை துவக்கியுள்ளனர்.

இதன் காரணமாக பிரதமர் ஃபுமியோ கிஷிடாவின் அரசாங்கத்தின் செல்வாக்கு வீழ்ச்சியடைந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4