பணிப்புறக்கணிப்பில் ஈடுபடும் கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையின் வைத்தியர்கள்!
#SriLanka
#Protest
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்று (14.12) அடையாள வேலைநிறுத்தத்தை முன்னெடுக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
கண் வைத்தியசாலையின் பிரதம நிருவாகியின் முறைகேடுகள் தொடர்பில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமைக்கு எதிராகவே இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அச் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டொக்டர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
இதன்படி கண் வைத்தியசாலையில் இன்று காலை 8.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை பணிப்புறக்கணிப்பு அமுல்படுத்தப்படவுள்ளதாக வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காவிட்டால் தொழில் ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.