முறையற்ற விதத்தில் இலாபம் ஈட்டியோர் தொடர்பில் நடவடிக்கைக்கு உத்தரவு!
#SriLanka
#Parliament
#Tax
PriyaRam
2 years ago
கோதுமை மா மற்றும் சீனி இறக்குமதியில் முறையற்ற இலாபம் ஈட்டிய தரப்பினரிடம் இருந்து உரிய வரிகளை அறவிடுமாறு உள்நாட்டு இறைவரி திணைக்களத்திற்கு வழிவகைகள் பற்றிய குழு உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு சந்தையில் சில பொருட்களின் விலைகள் உயர்வடைந்துள்ளன.

மேலும் முட்டை இறக்குமதியை நிறுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்ததை தொடர்ந்து சந்தையில் முட்டை விலை மீண்டும் அதிகரித்துள்ளது.
இதற்கமைவாக கடந்த சில நாட்களாக ஒரு முட்டை 55 ரூபாய் முதல் 65 ரூபாய் வரை விற்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது