போதகர் ஜெரோம் பெர்னாண்டோவிற்கு கோட்டை நீதவான் விடுத்துள்ள உத்தரவு!
#SriLanka
#Arrest
#Court Order
#Judge
#Court
Mayoorikka
2 years ago
மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஜெரோம் பெர்னாண்டோவை எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் திலின கமகேவால் நீடித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றம் விடுத்த உத்தரவிற்கு அமைய வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் கடந்த 1ம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு சென்றிருந்தார்.

சர்ச்சைக்குரிய கருத்தொன்றை வௌியிட்ட பின்னர் போதகர் ஜெரோம் பெர்னாண்டோ, வௌிநாடு சென்றிருந்தார்.
வௌிநாடு செல்லத் தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்த நிலையிலேயே அவர் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.