இன்றைய வானிலை முன்னறிவிப்பு!
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் இன்று (13.12) அவ்வப்போது மழை பெய்யும் என வளிமண்டலளவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது.
வட மாகாணத்தின் அனுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதேபோல் சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மதியம் சுமார் 1 மணிக்குப் பிறகு, சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் எனவும், சில இடங்களில் 75 மி.மீற்றர் வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் முன்னுரைக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை,தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.