மலேசியாவில் இடம்பெற்ற சர்வதேச மனக்கணித போட்டி - சாதனை படைத்த மட்டக்களப்பு சிறுமி
#SriLanka
#Batticaloa
#International
#Tamil Student
#Lanka4
#Malasia
#Tamilnews
#competition
#Mathematic
Prasu
2 years ago
மலேசியாவில் இடம்பெற்ற சர்வதேச மனக்கணித போட்டியில் மட்டக்களப்பைச் சேர்ந்த 6 வயது மாணவி 3ன் றாம் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.
கொழும்பில் B.M.I.C.hல் இடம்பெற்ற யுசிமாஸ் மனக்கணித போட்டியில் நாடளாவிய ரீதியில் பலர்பங்கு பற்றி கொண்ட போட்டியில் முதலாம் இடத்தை பெற்ற தமிழ்செல்வன் அக்சதா சர்வதேச மனக்கணக்கு போட்டியில் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
இவர் 3ம் திகதி மலேசியாவில் 80 க்கு மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 2500 கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் இலங்கையில் இருந்து 62 மாணவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது 6 வயதுடைய அக்சதா எனும் மாணவி போட்டியில் கலந்து கொண்டு 3ம் இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார்.
செங்கலடி பகுதியைச் சேர்ந்த இவர் மத்தியமகாவித்தியாலயத்தில் தரம் ஒன்றில் கல்வி கற்று வருபவருமாவார்.