புத்தளத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்கம் மீட்பு!
#SriLanka
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
புத்தளம் தடாகத்தில் மூழ்கியிருந்த 04 கிலோவுக்கும் அதிகமான தங்கம் கடற்படையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
புத்தளம் தடாகத்தில் பட்டலங்குண்டுவ தீவுக்கு அருகில் உள்ள கடலில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இருவர், மற்றும் ஒரு டிங்கி படகு ஒன்றும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.