போதைப்பொருள் குற்றச்சாட்டின் கீழ் இவ்வருடத்தில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டோர் கைது!
#SriLanka
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
இந்த வருடத்தில் இதுவரையில் போதைப்பொருள் குற்றங்களுக்காக கிட்டத்தட்ட ஒரு இலட்சத்து 23 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தேசிய போதைப்பொருள் கட்டுப்பாட்டு சபை அறிவித்துள்ளது.
இந்தக் கைதுகளின் போது 61 கிலோ ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதாக அதன் தலைவர் ஷாக்ய நாணயக்கார தெரிவித்தார்.
போதைப்பொருள் தொடர்பில் இதுவரை 831 பாடசாலைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் திரு.ஷாக்ய நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.