கொழும்பின் பல பகுதிகளில் நீர்வெட்டு!
#SriLanka
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
கொழும்பின் பல பகுதிகளில் இன்று (09.12) 16 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளதாக சபை தெரிவித்துள்ளது.
குறித்த பிரதேசங்களுக்கு இன்று மாலை 05.00 மணி முதல் நாளை காலை 09.00 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும் என நீர் வழங்கல் சபை தெரிவித்துள்ளது.