ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்ட இமாலய பிரகடனம்!
#SriLanka
#Hindu
#Ranil wickremesinghe
#Buddha
PriyaRam
2 years ago
உலக தமிழ் மன்றமும் முக்கிய பௌத்த சங்கத்துறவிகளும் நேற்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இதன்போது கூட்டு இமாலய பிரகடனத்தை அவர்கள் ஜனாதிபதியிடம் கையளித்ததாக ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது.

சமூக நல்வாழ்வை முதன்மைப்படுத்தும் பன்மைத்துவ இலங்கையை ஊக்குவித்தல் போன்ற விடயங்கள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
மேலும் வரலாற்றுத் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்வது, பொறுப்புக்கூறல் நடவடிக்கைகளின் முக்கியத்துவம் குறித்தும் குறித்த பிரகடனத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.