அகில இலங்கை ரீதியில் சாதனை படைத்த கிளிநொச்சி மாணவன்!
#SriLanka
#School
#Student
#Kilinochchi
PriyaRam
2 years ago
அகில இலங்கை ரீதியில் நடத்தப்பட்ட ரோபோ தொழிநுட்ப தேசிய மட்ட போட்டியில் கிளிநொச்சி மத்திய கல்லூரியை சேர்ந்த உயர்தர தொழில்நுட்ப பிரிவு மாணவன் கிருபாகரன் கரல்ட் பிரணவன் தேசிய மட்டத்தில் 2ம் இடத்தை பெற்றுள்ளார்.
அத்துடன் மாகாணம் மற்றும் வலய மட்டத்தில் முதலாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டுள்ளார்.
இவரது கண்டுபிடிப்பான Relief attempt monitoring system கிளிநொச்சி மத்திய கல்லூரியில் பொருத்தப்பட்டு வெற்றி கரமாக செயல்ப்படுத்தப்படுகின்றது.