சர்வதேச மனக் கணித போட்டியில் மன்னார் மாணவர்கள் சாதனை!

#SriLanka #Mannar #Student #Tamil Student
Mayoorikka
2 years ago
சர்வதேச மனக் கணித போட்டியில் மன்னார்  மாணவர்கள் சாதனை!

மலேசியாவில் நடைபெற்ற 80 இற்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்கு பற்றிய மனக் கணித போட்டியில் இலங்கை சார்பில் மன்னார் மாவட்டத்தில் இருந்து சென்ற 5 மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

 டிசம்பர் 3ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மலேசியாவில் சர்வதேச மனக் கணித போட்டி இடம்பெற்றது. 

இந்த போட்டியில் உலகளாவிய ரீதியில் 80 இற்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்து 500 மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர். இலங்கையை பிரதிநிதித்துவ படுத்தும் வகையில் 62 மாணவர்கள் இதில் பங்குபற்றினர்.

images/content-image/2023/12/1701932352.jpg

 மன்னார் மாவட்டத்தை சேர்ந்த 5 மாணவர்களும் கலந்து கொண்டு மனக்கணித போட்டியில் பங்கு பற்றி வெற்றிக் கிண்ணங்களை வென்றுள்ளனர்.

 அந்த வகையில் மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்களான எஸ். சிறோன்றாஜ் D பிரிவில் பங்கு பற்றி 2 ஆம் இடத்தையும், மாணவன் வி. செஸான் 3 ஆம் இடத்தையும், லஸால் கிட்ஸ் கேம்பஸில் கல்வி கற்கும் மாணவி ஜே. ரெறா ஜெசாரி 3 வது இடத்தையும் யோசப் வாஸ் ஆங்கிலப் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவன் கே. அறிஸ்மித் 3 வது இடத்தையும் , தோட்டவெளி பாடசாலையில் கல்வி கற்கும் மாணவி ஆர். ரியானா 3 ஆம் இடத்தையும் பெற்று மன்னார் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

images/content-image/2023/12/1701932374.jpg

 இவர்கள் மன்னார் UCMAS நிறுவனத்தின் நிர்வாகியும் ஆசிரியருமான ந. கேதீஸ்வரன் அவர்களின் வழிகாட்டலின் கீழ் இப்போட்டியில் பங்கு பற்றி வெற்றிக் கிண்ணங்களை வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

images/content-image/2023/12/1701932395.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!