தனிப்பட்ட தகராறு காரணமாக நடு வீதியில் இடம்பெற்ற படுகொலை!
#SriLanka
#Police
#Murder
#Investigation
PriyaRam
2 years ago
சீதுவ - லியனகேமுல்ல பிரதேசத்தில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நபர் மரண வீடொன்றிற்கு சென்று வீடு திரும்பிய வேளையில் உந்துருளியில் சென்ற இருவரே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சீதுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.