பாடசாலை மாணவர்களிடையே இனிப்பு பானங்களின் நுகர்வு அதிகரிப்பு!
#SriLanka
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
இலங்கையில் முன்பள்ளிச் சிறுவர்கள் மத்தியில் இனிப்பு பானங்கள் மற்றும் சீனி உணவுகளின் பாவனை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் முன்பள்ளி சுகாதார மேம்பாட்டுத் திட்டத்தின் பிரிவுத் தலைவி சமூக சுகாதார நிபுணர் டொக்டர் இனோகா விக்கிரமசிங்க இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.
கொழும்பு மற்றும் குருநாகல் மாவட்டங்களில் முன்பள்ளிச் சிறார்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் இது தெரியவந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.