இலங்கை இராணுவத்தில் பெண்களுக்கு உயர் பொறுப்புக்களை வழங்க திட்டம்!
#SriLanka
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவற்றின் தலைமைப் பொறுப்பை பெண்களுக்கு வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரேமிதா பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவித்த அவர், ஒரு பெண் ராணுவத்தில் மேஜர் பதவிக்கு மட்டுமே செல்ல முடியும் என்றும், பெண்கள் பதவி உயர்வு பெறுவதற்கும், முப்படைகளுக்கும் உரிய நேரத்தில் தலைமையேற்கும் வகையிலும், இராணுவ சட்டங்களை மாற்ற அரசு திட்டமிட்டு வருவதாகவும் தெரிவித்தார்.