ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமானின் 144 ஆவது குருபூஜை தினம் இன்று!

#SriLanka #Astrology #Festival #Lifestyle
Mayoorikka
1 year ago
ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமானின் 144 ஆவது குருபூஜை  தினம் இன்று!

நல்லை நகர் ஆறுமுக நாவலர் இலங்கையில் சைவம், தமிழ் இரண்டும் வாழப் பணி புரிந்தவர். இன்று ஆறுமுக நாவலரின் 144 ஆவது குருபூஜை தினம் ஆகும்.

 "நல்லை நகர் ஆறுமுக நாவலர் பிறந்திலரேல் சொல்லு தமிழ் எங்கே சுருதி எங்கே?

 ஆறுமுக நாவலர் இலங்கையின் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நல்லூர் எனும் ஊரில் 1882 டிசம்பர் 18 ஆம் திகதி கந்தப்பிள்ளை மற்றும் சிவகாமி அம்மையார் தம்பதிகளுக்கு இறுதி மகனாகப் பிறந்தார்.

 இவரது இயற்பெயர் ஆறுமுகன் என்பதாகும். இவரது தந்தை, தாத்தா, பூட்டன் ஆகியோர் தமிழறிஞர்களாக இருந்ததுடன் அரச ஊழியர்களாகவும் இருந்துள்ளனர்.

 இவ்வாறான பெருமைமிக்க குடும்பப் பின்னணியில் இருந்து வந்த இவர் பிற்காலத்தில் சைவ மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் ஆனார். ஐந்தாவது வயதில் கல்வி கற்க ஆரம்பித்த இவர் சுப்பிரமணிய உபாத்தியரிடம் நீதி நூல்களையும் தமிழையும் கற்றார். 

images/content-image/2023/1701681443.jpg

பின்னர் சரவணமுத்து புலவரிடமும் சேனாதிராச முதலியாரிடமும் உயர்கல்வியை கற்றுக் கொண்டார். 12 வது வயதில் தமிழ், சமஸ்கிருதம் மொழிகளில் புலமை பெற்றார். 

,பின்னர் முன்னணி ஆங்கில பாடசாலையான வெஸ்லியன் பள்ளியில் ஆங்கிலம் கற்று திறமை பெற்றதோடு அதே பள்ளியில் தனது 19 வது வயதில் ஆசிரியராக பணியமர்த்தப்பட்டார்.

 இவரது பணிகள் சைவ சமயத்திற்கும் தமிழிற்கும் அளப்பரியவையாகும். அந்த வகையில் சைவ சமயத்தை வளர்க்கும் பொருட்டு பிரசங்கம் செய்வதை வழக்கமாக்கி கொண்டார்.

 இவரது பிரசங்கங்களின் விளைவாக சமய விழிப்புணர்வு ஏற்பட்டது. சைவப் பிள்ளைகளுக்கு நூல்களை அச்சிடுவதற்காக தனது இல்லத்திலேயே அச்சுக் கூடம் ஒன்றினை நிறுவி பல நூல்களை அச்சு வடிவில் உருவாக்கி மாணவர் கைகளில் கிடைக்கச் செய்தார். இவரது பணி தமிழகத்திலும் கூட பரவியிருந்தது. 

images/content-image/2023/12/1701681505.jpg

அங்கு திருவாடுதுறை, இராமநாதபுர சமஸ்தானம், மதுரை மீனாட்சி அம்மன் சந்நிதானம், குன்றக்குடி என பல இடங்களில் பிரசங்கங்கள் செய்து புகழ் பெற்றார்.

 அத்துடன் தமிழகத்தில் பல சைவ பாடசாலைகளை நிறுவியதுடன் பல நூல்களையும் அச்சிட்டு வெளியிட்டார். இவ்வாறான சைவப்பெருஞ் சேவைகளையும், தமிழ் வளர்ப்பினையும் செய்த ஆறுமுக நாவலர் டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி 1879 ஆம் ஆண்டு தனது 56 வது வயதில் இயற்கை எய்தினார்.

 இவர் இறந்தாலும் பதிப்பாளராகவும் வைச பிரசங்கராகவும், கல்விசாலை நிறுவனராகவும், எழுத்தாளராகவும் இவர் ஆற்றிய அரும் பெருஞ்செயல்கள் இவரது புகழை பறை சாற்றுபவையாக இருக்கின்றன.

இதேவேளை தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி ஆலய நிர்வாகத்தின் ஏற்பாட்டில் சைவத்தின் காவலர் நல்லைநகர் நாவலர் பெருமானின் நினைவு வைபவம் அவரது குருபூசை நன்னாளான இன்று திங்கட்கிழமை நல்லூரில் அமைந்துள்ள ஸ்ரீதுர்க்காதேவி மணிமண்டபத்தில் இடம்பெற்றது.

 தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி ஆலயத் தலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி. ஆறு.திருமுருகன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் துர்க்காபுரம் மகளிர் இல்ல மாணவிகளின் கூட்டுப் பிரார்த்தனை நிகழ்வு மற்றும் பேச்சுக்களும் இடம்பெற்றன.

 அத்துடன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர். சி.சிவலிங்கராஜா "நாவலர் பெருமானால் காக்கப்பட்ட சுதேசிய சைவத்தமிழ்ப் பண்பாடு" எனும் தலைப்பில் சிறப்புரையும் இடம்பெற்றுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!