எகொடஉயன கடல் பகுதியில நீராடச் சென்ற இளைஞர் நீரில் மூழ்கி மாயம்!
#SriLanka
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
எகொடஉயன கடல் பகுதியில நீராடச் சென்ற 20 வயதுடைய இளைஞர் ஒருவர் மாயமாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த இனைஞன் வேலை வாய்ப்புக்கான நேர்முக பரீட்சை ஒன்றிற்கு சென்றுவிட்டு தனது இரண்டு நண்பர்களுடன் கடலில் நீராடிக் கொண்டிருந்த போது நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காணாமல்போனவரை தேடும் பணியில் எகொடஉயன பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் தீவிரமாக செயற்பட்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எகொடஉயன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.