சமூகத்தை பலப்படுத்துவோம் எய்ட்ஸ் தடுப்போம் தொனிப்பொருளில் 35 ஆவது எய்ட்ஸ் தினம்!
சர்வதேச எய்ட்ஸ் தினமான இன்று சமூகத்தை பலப்படுத்துவோம் எய்ட்ஸ் தடுப்போம் எனும் தொனிப்பொருளில் பொருளில் அனுஷ்டிக்கப்படுவதாக வவுனியா பொது வைத்தியசாலையின் பாலியல் நோய் தடுப்பு பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியகலாநிதி திருமதி அருள்மொழி பாஸ்கரன் தெரிவித்தார்.
வவுனியா பொது வைத்தியசாலையில் பாலியல் நோய் தடுப்பு பிரிவில் இன்று இடம் பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவித்த அவர்,
எய்ட்ஸுக்கு எதிரான போராட்டம் வெற்றி பெறுவதற்கு சமூகத்தினரது ஒத்துழைப்பு மிகவும் இன்றியமையாததாக காணப்படுகின்றது. எச்ஐவியினால் பாதிக்கப்பட்டவர்களாக அதிக அளவில் அடையாளம் காணப்பட்டவர்கள் ஓரினச்சேர்க்கையாளர்கள், திருநங்கைகள், போதைவஸ்து பாவனையாளர்கள், விபச்சாரத்தில் ஈடுபடுவோர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்கள் தகுந்த சிகிச்சை எடுப்பது இந்நோய் பரவலை தவிர்ப்பதாலும் சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலமே 2030 ஆம் ஆண்டில் எய்ட்ஸ் நோயை இல்லாத ஒழிக்க முடியும்.
அந்த மகத்தான இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும். இதேவேளை 2022 ஆம் ஆண்டு 607 புதிய எச்ஐவி நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளார் கள். இவர்களில் 88 வீதத்தினர் ஆண்களாகும்.
இது 2021 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 48% அதிகரிப்பாக காணப்படுகின்றது. இலங்கை எச்ஐவி நோய் பரவல் குறைந்த நாடாகவே கருதப்படுகின்றது. இங்குள்ள சனத்தொகை அடிப்படையில் 0.1 வீதத்துக்கு குறைவானவர்களே தொற்றுக்கு உட்பட்டவர்களாக இருக்கின்றார்கள்.
இதில் 86 விதமான எச்ஐவி தோற்று பாதுகாப்பற்ற உடலுறவின் மூலம் ஏற்படுகின்றது. ஓரினச்சேர்க்கையாளர்கள் கூடிய அளவில் தொற்றுக்கு உள்ளாகி இருக்கிறார்கள் அவர்கள் குறிப்பாக 52 விதமாக காணப்படுகின்றார்கள்.
இலங்கையில் 2018 இல் இருந்து 15 வயதிலிருந்து 24 வயதுக்குட்பட்ட இள வயதினர் எச்ஐவி தொட்டு காணப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டு சுமார் 73 பேர் புதிய தோற்றாளர்கள் ஆக இனங்காணப்பட்டுள்ளனர். இதில் 66 பேர் ஆண்களாக காணப்படுகின்றனர்.
வவுனியா மாவட்டத்தை பொறுத்தவரையில் 2002 ஆம் ஆண்டு முதல் 33 எச்ஐவி தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளார்கள். அவர்களில் 19 ஆண்களும் 13 பெண்களும் அடங்குகின்றனர்.
இதில் 12 பேர் இறந்துள்ளார்கள். தற்போது 21 எச்ஐவி தோற்றாளர்கள் உள்ளனர். இவர்களில் 12 ஆண்களும் ஒன்பது பெண்களும் உள்ளடங்குகின்றனர். இவ்வருடம் 2 பேர் அடையாளங்கள் காணப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவர்கள் இருவரும் ஆண்களாக காணப்படுகின்றனர். இருவருமே ஓரினச்சேர்க்கையாளர்கள். 2030ல் எயிட்ஸ் முடிவுக்கு கொண்டுவரும் மகத்தான இலக்கை நோக்கிய முதலாவது படியாக எச்ஐவி பரிசோதனை உள்ளது.
இந்த பரிசோதனையை இலங்கையில் உள்ள அனைத்து எஸ்டிடி சிகிச்சை நிலையங்களிலும் இலவசமாக செய்ய முடியும். அதன் முடிவுகள் இரகசியமாகவும் பேணப்படும் எனவும் தெரிவித்தார்.