குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த பணியாளர்கள் நாடு கடத்தப்பட்டனர்!
#SriLanka
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இலங்கை வீட்டுப் பணியாளர்கள் 35 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
இதன்படி, விசா இன்றி குவைத்துக்கு வேலைக்குச் சென்று தங்கியிருந்த 33 வீட்டுப் பணியாளர்களுடன் மேலும் இரு பணியாளர்களும் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குவைத்தில் உள்ள இலங்கை தூதரகத்துக்கும் அந்நாட்டு உள்துறை அமைச்சகத்துக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து குறித்த குழுவினர் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.