டச்சுக்காரர்களால் கைப்பற்றப்பட்ட வரலாற்று பொருட்கள் மீளவும் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன!

1756 ஆம் ஆண்டு படையெடுத்த டச்சுக்காரர்களால் கண்டி அரச மாளிகையில் இருந்து திருடப்பட்ட லெவ்கே தலைவரின் திருமண வாள், பீரங்கி உட்பட 06 கலைப்பொருட்கள் நெதர்லாந்தில் இருந்து இன்று (29.11) இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
இந்த கலைப்பொருட்களில் கிர்த்தி ஸ்ரீ ராஜசிங்க மன்னரின் திருமண வாள், மன்னருக்கு சொந்தமான வெள்ளி கஷ்கொட்டை, மன்னரின் தங்க கத்தி, லெவ்கே தலைவரின் பீரங்கி மற்றும் இரண்டு பெரிய துப்பாக்கிகள் உள்ளன.
இன்று காலை 05.05 மணியளவில் ஜேர்மனியின் பிராங்பேர்ட்டில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-554 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு இந்த தொல்பொருட்கள் கொண்டுவரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நெதர்லாந்தில் டச்சுக்காரர்களால் திருடப்பட்ட இந்த நாட்டிற்கு சொந்தமான பல தொல்பொருட்கள் உள்ளன, அந்த தொல்பொருட்கள் எதிர்வரும் காலங்களில் பகுதிகளாக இந்த நாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.
இது தவிர இங்கிலாந்து உட்பட சுமார் இருபது வெளிநாடுகளில் இந்த நாட்டிலிருந்து திருடப்பட்ட தொல்பொருட்கள் பெருமளவு இருப்பு உள்ளதுடன், இந்தப் பொருட்களும் எதிர்காலத்தில் நாட்டிற்கு கொண்டு வரப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



