நாவலப்பிட்டி பகுதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது!
#SriLanka
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
நாவலப்பிட்டி - புடலுஓயா பிரதான வீதி ஹரங்கல பிரதேசத்தில் இருந்து மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளதால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
இதன் காரணமாக சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
கடும் மழை காரணமாக வீதியில் விழுந்த மண் மற்றும் கற்களை வீதி அபிவிருத்தி அதிகாரசபை தற்போது அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.