இடைநிறுத்தப்பட்டது நாட்டின் பிரதான மதுபானசாலைகளின் உற்பத்தி!
#SriLanka
PriyaRam
2 years ago
உரிய காலத்தில் வரி செலுத்தத் தவறியதன் காரணமாக நாட்டின் இரண்டு பிரதான மதுபான தொழிற்சாலைகளின் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, W. M. Mendis & Co Ltd மற்றும் Randenigala Distileries Lanka (Pvt) Ltd ஆகிய நிறுவனங்களில் மது உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என கலால் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த மாத தொடக்கத்தில், வரி செலுத்தத் தவறிய மேற்கூறிய மதுபான தொழிற்சாலைகளின் உரிமங்களும், மற்ற மூன்று மதுபான தொழிற்சாலைகளின் உரிமங்களும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.