கிளிநொச்சியில் சிறையில் இருந்து வந்த நபர் மர்மமான முறையில் உயிரிழப்பு!

கிளிநொச்சியில். கொலை வழக்கில் சிறைச்சாலையில் இருந்து வந்த நபர் மர்மமான முறையில் புகையிரத வீதிக்கு அருகில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விநாயகபுரம் பகுதியில் கடந்த 31.12.2022 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கொலை சம்பத்துடன் தொடர்பு பட்டவர் என சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபர் ஒருவர கடந்த மாதம் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில், குறித்த நபரே மேற்படி சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி செல்வா நகர் பகுதியில் சேர்ந்த 22 வயதுடைய ஜோன் பிரகாஷ் என்ற நபரே மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவருடைய சடலம் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவான் அவர்கள் பார்வையிட்ட பின்னர் பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இந்த சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



