இன்றைய வானிலை முன்னறிவிப்பு!
நாட்டின் பல பகுதிகளில் இன்று (27.11) முதல் அடுத்த சில நாட்களில் மழையுடன் கூடிய காலநிலை உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்படி கிழக்கு, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் தீவின் ஏனைய பகுதிகளில் பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனக் கூறப்படுகிறது.
திணைக்களத்தின் அறிவிப்பின்படி கிழக்கு, ஊவா, மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ கனமழை பெய்யக்கூடிய வாய்ப்பிருப்பதாக சொல்லப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை, தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.