எந்த சந்தர்ப்பத்திலும் நாட்டுக்காக சிந்தித்து தீர்மானங்களை எடுக்க வேண்டும்! பிரமித்த பண்டார
#SriLanka
#Sri Lanka President
#Ranil wickremesinghe
#Defense
# Ministry of Defense
Mayoorikka
2 years ago
கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு முகங் கொடுத்திருந்த இக்கட்டான சூழ்நிலையிலேயே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டைப் பொறுப்பேற்றார் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
நாட்டைக் கட்டியெழுப்பக்கூடிய திறமை ஜனாதிபதிக்கு உள்ளது. அதன் காரணமாகவே நாம் அவருக்கு ஆதரவு வழங்கினோம்.
அனைத்து சந்தர்ப்பங்களிலும் நாட்டுக்காக சிந்தித்து தீர்மானங்களை எடுக்க வேண்டும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் மேலும் தெரிவித்தார்.