மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 40 பேர் கைது!
#SriLanka
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
இலங்கையின் வெல்லம்பிட்டிய, சிங்கபுர பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ஏறக்குறைய 4 பெண்கள் உள்பட 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசேட அதிரடிப்படை (STF) மற்றும் இலங்கை இராணுவத்தினர் இணைந்து இன்று (26.11) குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கைகைய மேற்கொண்டுள்ளனர். மொத்தம் 138 போலீசார் மற்றும் 200 ராணுவ வீரர்கள் இந்த சோதனையை மேற்கொண்டனர்.
இதன் போது 61 வீடுகள் மற்றும் 196 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், அவர்களில் 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.