இன்றைய வானிலை முன்னறிவிப்பு!
#SriLanka
#weather
#Lanka4
#sri lanka tamil news
Thamilini
2 years ago
நாட்டின் பல மாவட்டங்களில் இன்று (25.11) பிற்பகல் 02 மணிக்கு பின்னர் இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகும் என வளிமண்டவலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது.
இதன்படி சப்ரகமுவ, மத்திய மற்றும் மேல் மாகாணங்களிலும் புத்தளம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் 02.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
வடமாகாணத்திலும், திருகோணமலை மாவட்டத்திலும் ஓரளவு மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை, தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களை கோரியுள்ளது.