காலநிலை அனர்த்தங்களுக்கான உடனடித் தீர்வுகளை அமுல்படுத்த வேண்டும்! ஜனாதிபதி பணிப்புரை

#SriLanka #Sri Lanka President #Ranil wickremesinghe
Mayoorikka
2 years ago
காலநிலை அனர்த்தங்களுக்கான உடனடித் தீர்வுகளை அமுல்படுத்த வேண்டும்! ஜனாதிபதி பணிப்புரை

2030 ஆம் ஆண்டளவில் 1.5 செல்சியஸினால் உலக வெப்பநிலையை மட்டுப்படுத்தவதற்குத் தேவையான இலக்குகளுடன், காலநிலை அனர்த்தங்களுக்கான உடனடித் தீர்வுகளைச் செயற்படுத்த வேண்டியது அவசியமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.

 இலங்கைப் பெற்றோலிய அபிவிருத்தி அதிகார சபை (PDASL) ஐக்கிய அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி முகவர் நிறுவனமான USAID உடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இலங்கை பசுமை ஹைட்ரஜன் மாநாடு - 2023 இன்று (21) கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் ஆரம்பமானது. 

 இந்த மாநாட்டில் மின்சக்தி, வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவினால் இலங்கை தேசிய ஹைட்ரஜன் வழிகாட்டல் வரைவு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது.

images/content-image/2023/11/1700550621.jpg

 இங்கு உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, 2023 ஆம் ஆண்டிற்கான ஐக்கிய நாடுகளின் தீர்வுகளுக்கான அறிக்கையில் அபிவிருத்தி அடைந்த நாடுகள் அளித்த வாக்குறுதிகள் மீறப்பட்டுள்ளதுடன், இந்த நூற்றாண்டின் இறுதியில் உலக வெப்பநிலை 3 செல்சியஸால் உயர்வடையக்கூடும். 2030 ஆம் ஆண்டளவில் 1.5 செல்சியஸினால் உலக வெப்பநிலையை மட்டுப்படுத்தவதற்குத் தேவையான இலக்குகளுடன், காலநிலை அனர்த்தங்களுக்கான உடனடித் தீர்வுகளைச் செயற்படுத்த வேண்டியது அவசியமென ஜனாதிபதி ரணில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.

 எரிசக்தி திட்டங்கள் தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்ளும் போது, பொருளாதார காரணிகள், விலை மற்றும் நீண்ட கால தாக்கங்களைக் கருத்தில் கொண்டு, அனைத்து விடயங்கள் தொடர்பிலும் ஆழமான தெரிவுடன் செயற்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அந்தத் தீர்மானங்களை மேற்கொள்ளும் போது வழிகாட்டலுக்கான வலுசக்தி மாற்ற சட்டம் மற்றும் பல் நிபுணத்துவக் குழுவொன்றை நியமிப்பதற்கான யோசனையும் முன்வைத்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!