T20 போட்டிகளுக்காக இந்திய அணியின் தலைமையில் ஏற்படவுள்ள மாற்றம்!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
5 months ago
T20 போட்டிகளுக்காக இந்திய அணியின் தலைமையில் ஏற்படவுள்ள மாற்றம்!

இந்திய T20 அணியின் தலைமை மாற்றம் குறித்து வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

அவுஸ்திரேலியாவுடனான இருபதுக்கு 20 கிரிக்கட் போட்டிகளுக்காக இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

அதன்படி, அந்தப் போட்டியில் இந்திய அணியின் தலைமைப் பொறுப்பு சூர்ய குமார் யாதவுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஹர்திக் பாண்டியா காயமடைந்துள்ள நிலையில்,  சூர்ய குமார் யாதவுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

அவுஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான 05 போட்டிகள் கொண்ட T20 தொடர் எதிர்வரும் 23ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.