வற் வரி அதிகரிப்பு மின்சாரக் கட்டணங்கள் உட்பட சில துறைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது!
#SriLanka
#taxes
#Minister
#Finance
#Tax
#Vat
Mayoorikka
2 years ago
அண்மையில் பெறுமதி சேர் வரி (VAT) அதிகரிக்கப்பட்ட போதிலும், அது மின்சாரக் கட்டணங்கள் உட்பட சில துறைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய உறுதியளித்தார்.
உலக வங்கி உடன்படிக்கைகளுக்கு அமைவாக வருவாயை அதிகரிப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளின் ஒரு பகுதியாக ஜனவரி மாதம் VAT ஐ உயர்த்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது, ஆனால் இது ஒரு தற்காலிக நடவடிக்கை என்று அமைச்சர் வலியுறுத்துகிறார்.
வரி வலையமைப்பை முழுமையாக நெறிப்படுத்தியவுடன் அரசாங்கத்தினால் பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்க முடியும் என கலாநிதி சியம்பலாபிட்டிய மேலும் விளக்கமளித்துள்ளார்.