நெடுஞ்சாலையூடான போக்குவரத்து தடை பட்டுள்ளதாக அறிவிப்பு!
#SriLanka
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
மாத்தறையில் இருந்து கொட்டாவ நோக்கி வந்த லொறி ஒன்று கவிழ்ந்ததால் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் தொடங்கொட மற்றும் கலனிகமவிற்கு இடையிலான வீதி முற்றாக தடைப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கி வரும் அனைத்து வாகன போக்குவரத்தும் தொடங்கொட சந்திப்பில் இருந்து வெளியேற வேண்டும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அந்த வாகனங்கள் மத்துகம ஊடாக களுத்துறை வீதிக்கு வந்து கலனிகம சந்திப்பில் மீண்டும் அதிவேக நெடுஞ்சாலையில் இணைந்து கொழும்பு நோக்கி செல்ல முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.