பணியிலிருந்து விலகுவதாக திடீர் அறிவிப்பு வெளியிட்டுள்ள சுகாதார பரிசோதகர்கள்!
#SriLanka
#strike
#Health Department
PriyaRam
2 years ago
பொது சுகாதார பரிசோதகர்கள் இன்று முதல் டெங்கு நோய் ஒழிப்புப் பணிகளிலிருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளனர்.
இந்த விடயம் தொடர்பிலும் எதிர்கால தொழிற்சங்க நடவடிக்கைகள் குறித்தும் சுகாதார அமைச்சின் செயலாளருக்கு அறியப்படுத்தியுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி, எதிர்வரும் 22ஆம் திகதி முதல் அனைத்து தொற்று நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளிலிருந்தும், டிசம்பர் மாதம் முதலாம் திகதி முதல் அனைத்து களப் பணிகளிலிருந்தும் விலகுவதற்கு பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.